அரியலூர் : திருச்சி சரக காவல் துணைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்கள் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி, வெங்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மளிகை கடை வைத்திருக்கும் நபர்களை அழைத்து எலி மருந்து விற்பனை செய்வது தொடர்பான அறிவுரைகளை வழங்கி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கயர்லாபாத் காவல் ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள் மற்றும் வெங்கனூர் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் தலைமையில் வெங்கனூர் காவல்நிலையத்தில் நடைபெற்றது.