இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் சைபர் கிரைம் காவல்துறையினர்.
தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 28.02.2021-ம்தேதி சைபர் கிரைம் காவல்நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆன்லைன் மூலம் நடைபெறும் பண மோசடிகள், சமூக வலைதளங்களை பாதுகாப்புடன் கையாளும் முறைகள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.