இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்த சௌந்தரராஜன் @ அஜிஸ்பாய் என்பவரை பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜோதி முருகன் அவர்கள் u/s 294(b), 323, 387, 506(ii)IPC & TNHW Act -ன் கீழ் கைது செய்தார்.
POCSO Act-ன் கீழ் கைது
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியில், 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த முனீஸ்வரன் என்பவரை இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி.ஞான அருள் ராஜமணி அவர்கள் POCSO Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்