கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினருக்கு, நேற்று அக்டோபர் 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி நகராட்சி கிருஷ்ணா நகர் என்ற பகுதியில் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் பலர் ஈடுபட்டு வருவதாக, காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.ராஜலட்சுமி மற்றும் கள்ளக்குறிச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆனந்தராசு மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் நேற்று கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகர் பகுதிக்கு சென்று அங்கு வீடு ஒன்றில் சூதாட்ட செயலில் ஈடுபட்டு வந்த ஒன்பது இளைஞர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வீட்டை காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது அந்த வீட்டில் கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு ஆன்லைன் பந்தயம், ஆன்லைன் ரெட்டிப்பு பண மோசடி, ஒன்லைன் பெட்டிங், ஒன் இண்ட் பெட் ஆப் என்ற ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் க செல்லம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மகன் மணிகண்டன் 27. என்பவருடைய தலைமையில், இளைஞர்கள் பலர் கூட்டாக இணைந்து வீட்டினை வாடகைக்கு எடுத்து அதில் ஆன்லைன் பெட்டிங் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
சின்னசேலம் வட்டம் க செல்லப்பட்டு கிராமம் மாணிக்கம் மகன் மணிகண்டன் 27. என்பவருடன்சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி சாமி நாயக்கன்பட்டி காட்டுவளவு கோவிந்தராஜ் என்பவருடைய மகன் சந்திரசேகர் 27, சின்னசேலம் வட்டம் மண்மலை கிராமம் அருணாசலம் என்பவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி 27, சின்னசேலம் காந்திநகர் ராதாகிருஷ்ணன் என்பவருடைய மகன் கோகுல்நாத் 24, சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமம் மதுரை வீரன் கோவில் தெரு கொளஞ்சி என்பவருடைய மகன் மணிவேல் 27
சின்னசேலம் வட்டம் ஈசாந்தை கிராமம் கிராமம் கருணாநிதி என்பவருடைய மகன் அரவிந்த் 24. சின்னசேலம் காந்திநகர் ரங்கசாமி என்பவருடைய மகன் அருண்குமார் 24. சின்னசேலம் காந்திநகர் ராஜா என்பவருடைய மகன் மணிகண்டன் 24.
சின்னசேலம் வட்டம் கரடி சித்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெரு ரவி என்பவருடைய மகன் பாலாஜி 23. ஆகிய ஒன்பது இளைஞர்களை மடக்கிப் பிடித்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சூதாட்ட இளைஞர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 6 கம்ப்யூட்டர் மானிட்டர், 9 சீ யூ பி எல்.இ.டி டிவி, 1 மோடம், 5 வைபை,
1 பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர். 1 யுபிஎஸ், 30 செல்போன்கள், 400 சிம் கார்டுகள்,
1 ராயல் என்ஃபீல்டு பைக், 1 எர்டிகா கார், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் ஆன்லைன் மூலம் பல கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜியா உல் ஹக் விசாரணையில் ஈடுபட்டு, இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் இதன்மூலம் இவர்கள் சம்பாதித்த கோடிக்கணக்கிலான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதன் பிறகு பிடிபட்ட 9 குற்றவாளிகளையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.