கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பளார் திரு. N.மோகன்ராஜ் அவர்கள் உத்தரவுபிறப்பித்தார். அதன்படி (11.02.2023), –ந் தேதி கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பளார் திரு.ரமேஷ் அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் அழைத்து அவர்களிடம் ஆட்டோக்களை இயக்கும் போது அரசால் அனுமதிக்கபட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும், குறுக்கியசாலை மற்றும் வலைவுகளில் மிக கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும், சாலை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும், இயந்திரங்களை தினந்தோறும் கவனித்தபின் வாகனங்களை இயக்க வேண்டும், சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.இளையராஜா மற்றும் உதவி ஆய்வாளர் திரு.தர்மராஜ் ஆகியோர்கள் உடனிருந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.