மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தேவையில்லாமல் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரியும் நபர்களை கடுமையாக எச்சரிக்கும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்கள். இன்று பைக்கரா மெயின் ரோட்டில் பல மாணவர்கள் முக கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியில் சுற்றிதிரிந்தவர்களை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் திரு. தம்புராஜா அவர்கள் மாணவர்களுக்கு முக கவசம் கொடுத்து அவர்களை அணிய வைத்து வீட்டிற்குச் செல்லும்படியும் மீண்டும் மீண்டும் வெளியே சுற்றித் திரிந்தால் கொரோனா வைரஸ் தொற்று பரவிவிடும் எனவும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
![](https://34.68.197.11/wp-content/uploads/2019/09/kumaran.jpg)
![](https://34.68.197.11/wp-content/uploads/2019/09/hari-madurai.jpg)