மதுரை : மதுரை மாநகரில் பணியாற்றும் 147 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.வினய் IAS., அவர்கள் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழக காவல்துறையில் 22 ஆண்டு கால சீரிய பணியினை பாராட்டி முதலமைச்சர் பதக்கம் பெற்ற மதுரை கரிமேடு காவல் நிலைய தலைமை காவலர் 2237 திரு.தெய்வேந்திரன் அவர்களுக்கு நமது போலீஸ் நியூஸ் ப்ளஸ் சார்பாக மதுரை மாவட்ட நிருபர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பதக்கங்கள் பெற்ற அனைத்து காவலர்களுக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்..
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்