சேலம் : சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தாரமங்கலம் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.புகாரின் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் SSI திரு.கந்தசாமி, தலைமை காவலர் திரு.அய்யப்பன், மற்றும் முதல் நிலை காவலர் திரு.கலையரசன், ஆகியவர்கள் காட்டு பிள்ளையார் கோயில் தெரு என்ற பகுதியில் சோதனை செய்தபோது ,சின்னதம்பி (45), மற்றும் ஓனர் சிவக்குமர் என்பவர்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர்.இந்த இரண்டு நபரையும் காவல்துறையினர் கைது செய்து புகார் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்