சேலம் : சேலம் மாவட்டத்தில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களுடைய வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அதிக அளவில் கஞ்சா விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில், இந்த வருடத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக 83,வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள 109 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் மூன்று பேர் மீது குண்டு தடுப்பு சட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கஞ்சா விற்பனையை தடுக்கும் புதிய முயற்சியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில், வார்டுகள் வாரியாக கஞ்சா உபயோகப்படுத்துபவர் விற்பனை செய்பவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அறவே கஞ்சா நடமாட்டம் இல்லாத கிராம பஞ்சாயத்துகள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது மேற்படி பகுதிகளில், குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அறவே கஞ்சா உபயோகம் அல்லது விற்பனை இல்லாத கிராம பஞ்சாயத்துகள் பொதுமக்களை ஒருங்கிணைத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிநவ் அவர்கள், தலைமையில் கூட்டம் நடத்தி மேற்படி பகுதிகளில் உள்ளவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு எந்த வகையிலும் கஞ்சா நடமாட்டம் விடக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக (12 /10/2022),-ம் தேதி கஞ்சா உபயோகப்படுத்துவோர் மற்றும் கஞ்சா விற்பனை அறவே இல்லாத ஏற்காடு காவல் நிலைய எல்லை தலைச்சோலை கிராமத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. மேற்படி கூட்டத்தில் கஞ்சா உபயோகித்ததின் தீமைகள் குறித்து விளக்கியும் கஞ்சா நடமாட்டம் வரவே இல்லாத கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொது மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்