சென்னை : தமிழகத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு போலீஸ் அகாடமி காவல் துறை இயக்குனர் திரு.பிரதீப் வி ஃபிலிப் அவர்கள், காவலர் பயிற்சி பள்ளி இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
பொது மக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக உள்ள திரு.ஆபாஷ்குமார் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி கூடுதல் பணியாக கவனிப்பார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சரகம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் திரு.விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம், சென்னை ஆளுநர் மாளிகையில் ஏ.டி.சி யாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.