உயிர் வாழ தேவையான சுவாச காற்றின் உயர்வை உணராத இன்றைய மனிதர்கள் , நவநாகரீக உலகில் பொருளாதாரத்தை மட்டும் யாசித்து வருங்கால சந்ததிகளுக்கு கிடைக்க வேண்டிய இயற்கை வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது .
நீர் நிலைகளான ஆறுகள் , வாய்க்கால்கள் எல்லாம் இன்று கழிவுகளை கடத்திச் செல்லும் வழித் தடங்களாக , குளங்கள் ,ஏரிகள் எல்லாம் ( பிளாஸ்டிக் கலத்த )குப்பை கொட்டும் குப்பை தொட்டிகளாக மாறி விட்டது .
இதுபோல் உள்ள மாசுபாடுகளால் பூமியில் மண்ணின் மகத்துவமும் ,விண்ணில் ( நம்மை சுற்றி சுழலும் காற்று மண்டலம் சுற்றுச்சூழல் பாதித்து ) ஓசோன் மண்டலமும் நாசமடைந்து வருகிறது இந்த பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.
ஓசோன் மண்டலத்தைப் பாதுகாக்க மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக் கன்றுகள் இன்றும் நடப்பட்டு வருகின்றன என்பது சிறப்பான செய்திதான் .
இருப்பினும் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க அணில் பிள்ளைக்கு தன்னாலானது போல் வீடுகள் தோறும் துளசிச் செடியை வளர்த்தால் அது கூடுதல் சிறப்பை தரும் .
அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை.
இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அத்துடன் அதிக ஆண்டுகளும் காத்திருக்க வேண்டும்.
ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.
துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் , 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பி.பி.எம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பி.பி.எம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் (அல்லது) 720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது) 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.
ஆக்சிஜனை உற்பத்தி செய்வது ஒவ்வொருவரது கடமையாகும் அதில் நமது பங்களிப்பாக ஒவ்வொருவர் வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்த்தால் வருங்காலம் வளமாக நலம் பெறும் என்பது திண்ணம்.
மேலும் இன்று உலகை மிரட்டும் கொரோனா போல் அன்று பல வித தொற்று நோய்கள் மிக வேகமாக பரவி வருவதை தடுக்க அந்த கால கட்டத்தில் நமது முன்னோர்கள் பயன் படுத்திய யுத்திகளில் ஒன்றுதான் இந்த துளசி செடி வளர்ப்பாகும் .
இதனை உணர்ந்து துளசிச் செடி வளர்ப்போம் .சுத்தமான காற்றை சுவாசிப்போம்
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்