இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில்நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை ஆளிநர்களுக்கு நடைபெறவுள்ள பாராளுமனற தேர்தலுக்கு காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துஅறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சரவணன் ( தலைமையிடம்), திரு.குமார் ( இணைய வழி குற்றப்பிரிவு), திரு. குணசேகரன் ( CWC), துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்) ,காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் (அரக்கோணம் உட்கோட்டம்) அவர்கள் தலைமையில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.