திருப்பத்தூர்: 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவத் துறையினர் முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர். காவல்துறை மற்றும் மருத்துவத் துறையினர் இணைந்து சமூக நலனுக்காக பங்களித்தனர்.




















