விழுப்புரம் : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளையின் சார்பாக மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதனை நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS., அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதில் மாவட்ட மருத்துவ சங்கத்தை சார்ந்தவர்களும், பள்ளி மாணவர்கள், சாரணர் சாரணியர் இயக்க மாணவ மாணவியர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொண்டு புற்று நோய்க்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் இருந்து சிக்னல் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.