விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமாநடி மேல்நிலைப்பள்ளி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் இன்று (17.11.2025) காலை 15:00 மணியளவில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் தலைமயில் பள்ளியின் ஆசிரியர், மாணவ மாணவியர்கள் மற்றும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.தவமணி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் சமூக நீதி தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
















