சேலம் : சேலம் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவ அடிப்படையில் ஆங்கில மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளதை தொடர்ந்து சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள், சேலம் சரகத்தில் இதுபோன்ற முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவ பார்த்து வரும் போலி மருத்துவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்டரீதிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சேலம் நாமக்கல் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவ தொழில் ஈடுபட்டு வந்த பன்னீர்செல்வம் (63), ராமசாமி பெருமாள் கோவில் தெரு, வி. என், பாளையம் சங்ககிரி தேவராஜன் (67), காளிப்பட்டி பிரிவு ரோடு, வைகுந்தம் சங்ககிரி மணிகண்டன் (38) கச்சேரி தெரு, ஓமலூர் வாசுதேவன் (46), தொப்பலான் காட்டுவளவு சர்க்கரை செட்டிபட்டி ஓமலூர் ஆண்ட்ரூஸ் ஆர்.சி செட்டிபட்டி ஓமலூர் தாலுகா சேலம் மாவட்டம் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடீம் குருவி நாயன்பள்ளி பர்கூர் கோவிந்தராஜ் (50) குண்டலி மலையூர் தொக்கியம் திருப்பத்தூர் தாலுக்கா மிதுன்குமார் (27) ஜெய்ப்பூர் தாலுக்கா ராஜஸ்தான் மாநிலம் தற்போது ஜகதேவ ரோடு பருகூர் கிருஷ்ணகிரி குப்புராஜ் (48) கோவிந்தன் கொட்டாய் பெரிய மோட்டூர் மற்றும் முகமது செரீப் எழுதுவது முகமது கோர்ஸ் சர்ச் புரா அஞ்சல் பெங்களூர் மாவட்டம் கர்நாடக மாநிலம் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மேலும் தர்மபுரி மாவட்டத்தில் முருகேசன் (62), பெருமாள் வன்னியர் தெரு நல்லாம்பள்ளி தாலுக்கா மற்றும் முனுசாமி 63 மல்லிகுந்தம் மேட்டூர் தாலுக்கா சேலம் மாவட்டம் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதுவரை சேலம் சரகத்தில் கடந்த (1.4.2023)-ம் தேதி முதல் 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இதுபோன்று போலி மருத்துவர்கள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சேலம் சரகத்தில் உள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்