புதுக்கோட்டை: குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளிகள் பொய்யானவை. போலியான செய்திகளை கேட்டோ, காணொளிகளை பார்த்தோ பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.