கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின்படி., கச்சிராயபாளையம் அருகேயுள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் காவலர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்குண்டான தண்டனைகளை பற்றியும், பாலியல் சம்பந்தப்பட்ட புகாரை எப்படி கொடுக்கலாம், யார் கொடுக்கலாம் என்றும், குழந்தைகளை பாதுகாப்பாக எப்படி வளர்க்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.