திருப்பூர் : திருப்பூர் பொங்கலூர் அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 700 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர், கைது செய்தனர். புகையிலை பொருட்கள் தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று பொங்கலூர் அருகே திருப்பூர்- தாராபுரம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படைகாவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அவற்றை காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 700 கிலோ. 2 பேர் கைது இதையடுத்து அவற்றை பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரர் திருச்செங்கோட்டை சேர்ந்த முருகன் (42), சுரேஷ்குமார் (44), ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும்காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடித்தனர். ஒரே நேரத்தில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பொங்கலூர் பகுதியில் பறிமுதல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.