நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறை நீலகிரி மக்களின் நலன் கருதி கைபேசி செயலி (Mobile App) “Nilgiris District Police” ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நீலகிரி மக்கள் நேரடியாக தங்களின் குறைகளை காவல்துறையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவும் தங்களது புகார்களை நேரடியாக வழங்கவும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்று உள்ள காரணத்தினால் மக்கள் இச்செயலியை பயன்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம். மேலும் மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுலபமாக தங்களது புகார்களை இச்செயலின் மூலம் பதிவு செய்யலாம். இதற்கென தனியாக கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து புகார்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இச்செயலியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள், காவல் நிலையங்கள்,சிறப்பு பிரிவுகள் உட்பட ஆகியோரின் விவரங்களையும் தொலைபேசி எண்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சுற்றுலா பயணிகள் தங்கள் விருப்பப்பட்டு செல்ல வேண்டிய சுற்றுலா தலங்களின் விவரங்களையும் தாங்கள் இருக்கும் இடத்தின் மிக அருகில் உள்ள காவல் நிலையத்தையும், பேருந்து நிலையம்,ரயில் நிலையம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
இச்செயலியை காவல் கண்காணிப்பாளர் Dr.V. சசிமோகன் I.P.S அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் படுத்தினார்.