திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மாதம் காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் ஆன்லைனில் கட்டுரைப் போட்டியை தொடங்கி வைத்தார். கொரானா என்ற கொடிய நோயில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக இருந்தால்? என்ற தலைப்பு வழங்கப்பட்டது.
இதில் 521 மாணவ மாணவிகள் பங்கேற்று கட்டுரைகளை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் உமராபாத் காயத்ரி என்ற ஏழாம் வகுப்பு மாணவி, வாணியம்பாடியை சேர்ந்த கவியரசன் என்ற மாணவனும் தேர்வு செய்யப்பட்டனர். கல்லூரி அளவில் வாணியம்பாடி தனியார் கல்லூரியை சேர்ந்த பவித்ரா நவீன்குமார் முதல் பரிசையும் இரண்டாம் பரிசை சல்மாவின் என்ற மாணவரும் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 2,000 ரூபாயும் காவல் கண்காணிப்பாளர் திரு விஜயகுமார் வழங்கி பாராட்டினார். மேலும் இந்த கட்டுரை போட்டியில் பங்கேற்ற 571 மாணவரும் மாணவர்களுக்கும் ஊரடங்கு உத்தரவு, முடிவடைந்த பின் மத்திய அரசு விருது வழங்கப்பட உள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.