திண்டுக்கல் ரெயில் நிலைய நடைமேடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் GTN கல்லூரியின் NCC மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
“இயற்கை வளத்தை பாதுகாப்போம், மரங்களை பாதுகாப்போம், பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்” என்ற அறிவிப்பு கோஷங்களை ஒலிக்கச் செய்து, பொதுமக்கள் மத்தியில் சூழலியக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு திண்டுக்கல் ரெயில் நிலைய மேலாளர் திரு. செந்தில்குமார் தலைமையினில் தொடக்கமானது. பள்ளி மாணவர்கள், NCC பயிற்சியாளர்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டு, பசுமை மற்றும் பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரத்தை உற்சாகமாக முன்னெடுத்தனர்.
பேரணியின் முக்கிய நோக்கம், பசுமை சூழலை உருவாக்கி வரும் தலைமுறைக்கு நல்ல நலன் மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்குவது என்பது.
இதுபோன்ற செயல்கள், மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வையும், சுற்றுச்சூழலுக்கான அக்கறையையும் வளர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா