திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் நடத்தும் 8-ம் ஆண்டு நுகர்பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா 01.01.2021-ம் தேதி முதல் 03.01.2021-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் அரங்கம் அமைத்து, காவலன் SOS செயலி என்பது பொதுமக்கள் சிறந்த முறையில் அவசரகால உதவி பெற தமிழக காவல்துறையினரால் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்வு பொதுமக்களை பலரையும் கவர்ந்துள்ளது.