கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வந் (15) என்ற சிறுவன் கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் கடந்த 4ஆம் தேதி தவறி விழுந்த சிறுவன் மாயமானார். அந்த சிறுவனை கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து சடலத்தை தேடும் பணியில் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் 8-வது நாள் இன்று காலை அஸ்வந்த் சடலம் தண்ணீரில் மிதக்கிறதை கண்டுபிடித்து மீட்டனர்.