இராமநாதபுரம் : புன்னகையை தேடி நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.ஆனந்தி மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.விமலா, தலைமைக் காவலர்கள் தர்மர், ஜானகிராமன், மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திருமதி.பூங்கொடி, சைல்டு லைன் உறுப்பினர் திருமதி.சுசி ஆகியோர்கள் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு, மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக எடுத்துரைத்து குழந்தைகள் உதவி எண் 1098 பற்றிய அறிவுரைகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்