சென்னை : சென்னை , திருவல்லிக்கேணி , பகுதியை சேர்ந்த பிரகாஷ் , (31) என்பவர் கடந்த 10.10.2019 ம் ஆண்டு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்டது குறித்து T – 7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து T – 7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1) கார்த்திக் , வ / 28 , 2) குமார் , வ / 30 , 3) அரவிந்த் , வ / 20 ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த கொலையுண்ட பிரகாஷின் மாமியார் சகுந்தலா , வ / 42 ,திருவல்லிக்கேணி என்பவரை நேற்று ( 19.01.2021 ) காவல் குழுவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சகுந்தலா மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.