மதுரை: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற அத்திவரதர் வைபவ நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிகளை திறம்பட மேற்கொண்டமைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள், காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.மகேஷ் இ.கா.ப., அவர்கள், காவல் துணை ஆணையர் போக்குவரத்து திரு.சுகுமார் அவர்கள் நகர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ரமேஷ், அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.வினோஜி, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு (ALGC) காவல் உதவி ஆணையர் திரு.அலெக்ஸ்சாண்டர், திருப்பரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் திரு.இராமலிங்கம், நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஜோசப் நிக்சன் ஆகியோர்களுக்கு 23.10.2019 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் விருது வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை