செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று தினங்களாக நடைப்பெற்ற சிறப்பு தேடுதல் வேட்டையில் 116 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 39 கைது செய்யப்பட்டனர், கு.வி.மு.ச பிரிவு 110-ன் கீழ் 74 பேரிடம் நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டது.