சென்னை : தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை), கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் போலீசார் சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் திரு.சங்கர் ஜிவால், தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை மற்றும் தியாகராயநகர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தீபாவளி பாதுகாப்பு பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, திரு. இணை கமிஷனர் நரேந்திரன் நாயர், உள்பட போலீஸ் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா