திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், சின்ன ஓலப்பாளையம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் குப்பங்காடு என்ற தோட்டத்தில் உள்ள 100 அடி கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த சின்னான் என்பவர் தவறி விழுந்துவிட்டார் என்ற தகவல் அறிந்து உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் கிராம காவலர் திட்டம் மூலம் அப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட திரு. நவீன் குமார் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்ல அவிநாசி காவல்துறையினரும் அவிநாசி தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த நபரை பத்திரமாக உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.விரைவாக செயல்பட்ட கிராம விழிப்புணர்வு காவலர் VVPO ( Village vigilance police officer) அவர்களை பொதுமக்கள் வெகுவான பாராட்டினார்கள்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்