திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவக்கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையின் மூலமாக பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊடரங்கால் உணவு இன்றி, பல ஆதரவற்ற மக்கள் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு.கோபிநாத் அவர்கள் தாராபுரம் நரிக்குறவர் காலனியில் 100க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.