திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கயம் திட்டுப்பாறை கொரானா தடுப்பு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர் பிரபு PC 218 அவர்கள் நேற்றிரவு அந்த வழியாக வந்த லாரி குடிபோதையில் சோதனை சாவடியில் நிற்காமல் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல் கட்டுப்பாடின்றி சென்ற கண்டெய்னர் லாரி யினை நிறுத்த முயற்சித்த போது அதே லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். கடமைக்காகவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் தன் இன்னுயிரை துச்சமென நினைத்த காவலருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உயிரிந்த காவலர் பிரபு அவர்களின் உடலுக்கு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல் IPS மரியாதை செலுத்தினார்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்