திருப்பூர் : ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கடந்த 28 தேதி அன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி ATM இயந்திரத்தை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திருமதி.திசா மிட்டல் உத்திரவின் பேரில். போலீசார் இன்று பெருந்துறை இல் வட மாநிலத்தை சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்தார்கள்.
இது தொடர்பாக வங்கி கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல், ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி அப்படியே அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து 69 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஊத்துக்குளி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள வடமாநில இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்