சேலம் : சேலத்தில் சாலையில் கிடந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
செவ்வாய்பேட்டையை சேர்ந்த கோபால் என்பவர், இருசக்கர வாகனத்தில் தமது பணியாள் வெள்ளி கட்டிகளை எடுத்துவந்தபோது, பையை தவறவிட்டு விட்டதாக புகார் அளித்திருந்தார்.
இதனிடையே அந்த வழியாக சென்ற சேகர் என்பவர் சாலையில் கிடந்த வெள்ளி கட்டிகளை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கூலித்தொழில் செய்து வரும் சூழலிலும், சேகரின் இந்த நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.