திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் நேரடியாகச் சென்று சோதனை நடத்தியதில் கொசவம்பாளையம் பகுதியில் கணேசன்(55) என்பவர் விற்பனைக்காக சாராயம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 1லிட்டர் சாராயம் மற்றும் 25 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்