தென்காசி : தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் மனைவியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் வீரசிகாமணி பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் இசக்கிமுத்து (29), சுப்பிரமணி என்பவரின் மகன் காளிராஜ் (25), மற்றும் கண்ணன் என்பவரின் மகன் அங்கு ராஜ் (23), ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்கள் சமர்பித்தார்.