திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின்படி ACTU காவல் ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் சமூகநலத்துறையுடன் இணைந்து அவிநாசி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவன் அல்லது சிறுமியிடம் பாலியல் செயல்பாடு என்பது தண்டிக்கப்படக்கூடிய குற்றம் எனவும் மற்றும் இவ்வகை குற்றத்திற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் எனவும் அறிவுரை கூறியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு கூட்டத்தின் போது அவ்வாறு பாலியல் செயல்பாடுகள் நடந்தால் புகார் தெரிவிக்க 1098 அல்லது காவல் துறையை தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்கள்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்