திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உண்டார்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேரை எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் செந்தில், சங்கரநாராயணன், சந்தியாகு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
