மதுரை: மாவட்டம் 26.08.19 மதுரை மாவட்டத்தில் நேற்று மாவட்ட SP திரு மணிவண்ணன் அவர்களின் தலைமையில் காவலர் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சில தேர்வு எழுதும் நபர்கள் தேர்வு ஆரம்பிக்க சிறிது நேரத்திற்கு முன்பு தேர்வு மையத்திற்கு வந்தனர். மேலும் அவர்கள் தேர்வு எழுதும் அறைகளை காண்பதில் பதட்டத்தின்னால் குழப்பம் ஏற்பட்டது. இதனைக் கண்ட மேலூர் போக்குவரத்து ஆய்வாளர் திரு ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகளை காண்பித்து சரியான நேரத்தில் தேர்வு எழுத உதவி புரிந்தனர். இதனை கண்ட தேர்வு மையத்திற்கு வெளியே இருந்த மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்