திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா அவர்கள் திண்டுக்கல் நகர் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள், நகர் மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்கள், சார்பு ஆய்வாளர் திருமதி.வினோதா, மற்றும் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர். நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாக 32-வது சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சீட்பெல்ட்(இருக்கை பட்டை) அணிவதன் அவசியம் குறித்து நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர், திண்டுக்கல், வேடசந்தூர், வத்தலகுண்டு, பழனி ஆகிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.