சென்னை : சென்னை, சூளைமேடு,பகுதியை சேர்ந்த ஜெனிபர், வ/32, கடந்த 05.01.2021 அன்று இரவு தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லேப்டாப் திருடு போயிருந்தது குறித்து F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிசிடிவி கேமரா மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினரின் தொழில் நுட்ப உதவியுடனும், மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான கலாம் (எ) அப்துல் கலாம், வ/21, துரைப்பாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் தங்க நகைகள், 1 லேப்டாப் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் இவர் மீது பூக்கடை, யானைகவுனி, நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய காவல் நிலையங்களில திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் குற்றவாளி கலாம் (எ) அப்துல்காலம் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்