• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Thursday, April 16, 2026
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

    அலங்காநல்லூரில் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    அலங்காநல்லூரில் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

    100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
    • வேலைவாய்ப்பு
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

    அலங்காநல்லூரில் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    அலங்காநல்லூரில் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

    100% வாக்களிக்க வலியுறுத்தி விழிபுணர்வு

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் விலை உயர்வு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
    • வேலைவாய்ப்பு
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • தமிழக தேர்தல் 2026
  • ஆரோக்கியம்
  • சட்டம்

தமிழக காவல்துறையின் இ-சேவைகள்

by Admin
October 15, 2019
in Latest News, Special Articles
Reading Time: 1 min read
91 1
A A
0
தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வழியாக பொதுமக்களுக்கு பல்வேறு இணையவழி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வசதி வாயிலாக பொதுமக்கள் பல்வேறு சேவைகளுக்காக காவல்துறையினை நாடுவதற்குரிய வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் தேசிய திட்டமான குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் அமைப்பானது தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒரு உன்னதத் திட்டமாகும். இத்திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள 1913 காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடிய 372 சிறப்பு காவல் பிரிவிற்கும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கம்

காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும்.

செயல்படும் முறை

விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணி முடிக்கப்படும். காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். காவல் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள QR குறியீட்டினை (QR CODE) ஸ்கேன் செய்தும் அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள சரிபார்ப்பு (verify) என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

PVR எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். இச்சேவை தொடர்பாக எழும் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை FAQs தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேற்படி சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் (Feedback) என்ற பகுதியினைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம். மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநகர ஆணையருக்கு மற்றும் சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர்-2 ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.

விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டணைக்குரிய குற்றமாகும்.

தமிழக காவல்துறை இணையதளம் வழியாக கீழ்கண்ட இணையவழி சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
  • காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை
  • இணையவழி புகார் பதிவு செய்தல்
  • முதல் தகவல் அறிக்கையினை பார்வையிடுதல்-பதிவிறக்கம் செய்தல்
  • முதல் தகவல் அறிக்கை, சமுதாயப்பணி பதிவேடு மற்றும் இணையவழி; புகாரின் நிலை குறித்து பார்வையிடும் வசதி
  • வாகனங்கள் தேடும் வசதி
  • காணாமல் போனவர்கள்-அடையாளம் தெரியாது பிரேதங்களை தேடும் வசதி
  • சாலை விபத்து வழக்கு ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி
  • காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான அறிக்கை
  • கைபேசி குறுங்செய்தி சேவைகள்

 

‘காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’

‘காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற ஒரு புதிய இணைய வழி சேவையினை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பின்வரும் சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

  1. தனிநபர் விவரம் சரிபார்ப்பு
  2. வேலை நிமித்தமான சரிபார்ப்பு
  3. வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு
  4. வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு

மேற்படி சேவையினைப் பயன்படுத்துவதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500 மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒருமுறையினைப் பயன்படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம்.

இணையவழி புகார் பதிலு செய்தல்

இணையவழி புகார் பதிவு செய்யும் வசதியினைப் பயன்படுத்தி பொதுமக்கள் அவர்தம் இல்லத்தில் அமர்ந்தபடி காவல் துறைக்கு புகார் அனுப்பலாம். ஆவர் அளித்துள்ள புகார் நிலை குறித்து இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடனும், புகார் மீது நடவடிக்கை எடுக்கபட்ட பின்னரும் அதுகுறித்த விவரத்தினை, புகார்தாரரால் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு ஒரு குறுங்செய்தி வாயிலாக தகவல் அனுப்பி வைக்கப்படும். மேலும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த புகார்தாரரின் கருத்துக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-காவல் ஆணையரின் CCTNS  மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பி வைக்கப்படும். தற்பொழுது மாதம் ஒன்றிற்கு தோராயமாக 7000 இணையவழி புகார்கள் பெறப்படுகின்றன.

முதல் தகவல் அறிக்கையினை பார்வையிடுதல்-பதிவிறக்கம் செய்தல்

15.11.2016 முதல், ஒரு சில முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை தவிர ஏனைய அனைத்து வழக்குகள் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கைகளை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த வசதியானது மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் இவ்வசதியினை பயன்படுத்தி தோராயமாக 2,00,000 முதல் தகவல் அறிக்கை தொடர்பான விவரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் மென்பொருள் அமைப்பில் கணினியில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும் முறையினை 15.04.2016 முதல் ஏற்படுத்தப்பட்டதன் பயனாக இவ்வசதி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை-சமுதாயப்பணி பதிவேட்டின் நிலை குறித்து பார்வையிடுதல்

இவ்வசதியினை பயன்படுத்தி வழக்கு சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை- சமுதாயப் பணி பதிவேட்டின் நிலை தொடர்பான விவரங்களை புகார்தாரர்கள் இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம்.

வாகனங்களை தேடுதல்

இவ்வசதியின் மூலம் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது அவ்வாகனம், ஏதேனும் திருட்டு வழக்கு அல்லது விபத்து வழக்கு எதிலும் தொடர்புடையதா என்ற விவரத்தினை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். பெரும்பாலான பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி வருகின்றனர்.

காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிரேதங்களை தேடுதல்

குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிக்கும் வலைபின்னல் அமைப்பில், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டவுடன், காணாமல் போனவரின் புகைப்படம் மற்றும் அங்கமச்ச அடையாள விவரங்கள் பொதுமக்கள் காணும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இவ்வசதியினை பயன்படுத்தி, காணாமல் போன நபரின் உறவினர்கள்-நண்பர்கள் காணாமல் போன நபரினை பற்றிய விவரங்களை தேடலாம். மேலும் அடையாளம் தெரியாத பிரேதம் பற்றிய வழக்கு பதிவானவுடன், புலன்விசாரணை அதிகாரி, இவ்வசதியினை பயன்படுத்தி காணாமல் போனவர்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண்பதற்கான முயற்சியினை மேற்கொள்வார்கள். இவ்வசதியினை பயன்படுத்தி இதுநாள் வரையில் 459 அடையாளம் தெரியாத பிரேதங்கள், காணாமல் போனவர்களுடன் ஒப்பிடப்பட்டு காவல் துறையால் கண்டறியப்பட்டுள்ளன
மேலும், மனநிலை சரியின்மையால் யாரேனும் காணாமல் போயிருந்தால், அவர்கள் மீட்கப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ உதவி கொடுக்கப்படுவார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை மீட்கப்பட்டவர்கள் (Found By NGO) என்ற வசதியின் மூலம் பொதுமக்கள் காணலாம். இவ்வசதியின் மூலம், இதுவரை 6 காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கபட்டு அவர்களின் உறவினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறுஞ்செய்தி சேவை

பொதுமக்களுக்கு விரிவான சேவை வழங்கும் நோக்கில், குறுஞ்செய்தி அனுப்பும் வசதி தமிழக காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கீழ்கண்ட சேவைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகின்றன.
இணையவழி புகார் பதிவு செய்தவுடன்-இணையவழி புகார் விசாரைண முடிவடைந்தவுடன் முதல் தகவல் அறிக்கை-சமுதாயப் பணி பதிவேடு விசாரணை முடிவடைந்தவுடன் கைது செய்யப்பட்ட விவரத்தினை கைதியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துதல்.

சாலை வாகன விபத்து வழக்கின் புகார்தாரருக்கு இழப்பீடு தகுதி குறித்த விழிப்புணர்வு செய்தி

இணைய வழி புகார் பதிவு செய்யபட்டவுடன், புகார்தாரருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதுடன், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அலுவலருக்கு ஒரு குறுஞ்செய்தி எச்சரிக்கை அனுப்பப்படும். இந்த குறுங்செய்தியானது அனுப்புனர் பெயர் TNPOLS மூலம் மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேற்கண்ட வசதி ஏற்படுத்தப்பட்ட பின்னர், ஜனவரி 2017 முதல் இதுநாள் வரையில், 18,94,701 குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

சாலை விபத்து சம்பந்தமான ஆவணங்களை பரிமாற்றம் செய்யும் வசதி

இவ்வசதியானது நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இணையதளம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலை விபத்தால் பாதிக்கபட்டவரின் உறவினர்கள் காப்பீடு நிறுவனத்திலிருந்து உரிய இழப்பீட்டை விரைவாக பெறுவதற்கான இவ்வசதி 30.08.2017 அன்று தொடங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் பொழுது, காவல்துறைக்கு அளித்த கைபேசி எண்ணினை பயன்படுத்தி பயனாளர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை, ஒரு ஆவணத்திற்கு ரூ.10- வீதம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இக்கட்டணத்தினை இணையதளம் வழியாக செலுத்தலாம்.விபத்தால் பாதிககப்பட்டவர்கள் மேற்படி ஆவணங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உரிய இழப்பீடு பெறுவதற்காக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வசதி காப்பீடு நிறுவனங்களுக்கு மற்றும் காப்பீடு தீர்ப்பாயங்களுக்கு 29.03.2017 அன்று வழங்கப்பட்டது. காப்பீடு நிறுவனங்கள் ஒரு ஆவணத்திற்கு ரூ.100- வீதம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காணாமல் போன ஆவணங்கள் பற்றிய அறிக்கை

கீழ்கண்ட ஆவணங்கள் காணாமல் போனால், இணையதளம் வழியாக தகவல் அளித்து, காணாமல் போன ஆவண அறிக்கையின்படி உடனே பெற்று கொள்ளலாம்.
• கடவுச் சீட்டு
• வாகன பதிவு சான்று
• ஓட்டுநர் உரிமம்
• பள்ளி- கல்லூரி சான்றுகள்
• அடையாள அட்டை
இந்த வசதியானது ஆகஸ்ட் 2017 ல் துவக்கபட்டது. இந்த வசதியின் மூலம் கிடைக்கபெற்ற அறிக்கையினை, ஆவணங்கள் வழங்கும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். இந்த வசதி ஏற்படுத்திய பின்னர் பொதுமக்கள் காணாமல் போன ஆவணங்கள் பற்றி காவல்துறை அறிக்கையினை பெறுவதற்காக நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் 1,55,000க்கும் மேற்பட்ட மக்கள் இவ்வசதியினை பயன்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களுக்கான கைபேசி செயலி

பொதுமக்களுக்கான கைபேசி செயலியானது ஜீலை 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் இக்கைப்பேசி செயலியினை தமிழக காவல்துறை இணையதளத்தில் அல்லது கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய வழி சேவைகளை இந்த செயலி வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

இ-சேவை மையம் வழியாக வழங்கப்படும் சேவைகள்

தமிழக காவல் துறையின் இணையவழி சேவைகளை ஒரு நியாயமான குறைந்தபட்ச கட்டணத்தினை செலுத்தி அரசு இ-சேவை மையங்களிலும் பெற்று கொள்ளலாம்.

சாட்சிகளுக்கு குறுஞ்செய்தி வழியாக அழைப்பாணை அனுப்பும் வசதி

நீதிமன்றத்திலிருந்து சாட்சிகளுக்கான அழைப்பாணை பெறப்பட்டவுடன், அதுபற்றிய விவரங்களை சாட்சிகளுக்கு குறுஞ்செய்தி வழியாக அனுப்பும் வசதி 04.01.2018 முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலிருந்து சாட்சிகளுக்கான அழைப்பாணை பெறப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலுள்ள CCTNS ல் பதிவு செய்யப்படுகிறது. கணினியால் தயாரிக்கப்பட்ட தமிழ் குறுஞ்செய்தியானது. சாட்சிகளின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு தானியங்கி முறையில் அனுப்பி வைக்கப்படுகிறது. சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்புவதற்கு தற்பொழுதுள்ள நடைமுறையுடன் கூடுதலாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உரிய காலக்கெடுவிற்கும் முன்னதாகவே சாட்சிகளுக்கு அழைப்பாணை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படுவதால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு உரிய காலத்தில் திட்டமிட வசதியாக உள்ளது.

Related

Share124Tweet78Send

மேலும் செய்திகள்

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

கள்ளச்சந்தை மது விற்பனை: ஒருவர் கைது

April 16, 2026
தேர்தல் பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆய்வு

தேர்தல் பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆய்வு

April 16, 2026
தேர்தல் பாதுகாப்பு பயிற்சி வழங்கல்

தேர்தல் பாதுகாப்பு பயிற்சி வழங்கல்

April 16, 2026
4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்றவர்கள் கைது

April 16, 2026
Please login to join discussion
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை
Election News

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை

by Admin
March 30, 2026
0

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...

Read more
அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்

March 30, 2026
திமுக தேர்தல் அறிக்கை – 2026

திமுக தேர்தல் அறிக்கை – 2026

March 30, 2026
வீட்டில் இருந்தே ஓட்டு போட எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

வீட்டில் இருந்தே ஓட்டு போட எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

March 19, 2024

அண்மை செய்திகள்

கள்ளச்சந்தை மது விற்பனை: ஒருவர் கைது

தேர்தல் பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆய்வு

தேர்தல் பாதுகாப்பு பயிற்சி வழங்கல்

சட்ட விரோதமாக மது, கஞ்சா விற்றவர்கள் கைது

அகில இந்திய போட்டியில் காவலருக்கு தங்கப் பதக்கம்

பாதுகாப்பு படை மற்றும் ஆயுதப்படையினர்க்கு ஆலோசனை கூட்டம்

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.