திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையகம், பொறுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு, அவர்களின் உத்தரவு படி கடந்த 1.2.2821 முதல் 15.2.2021வரை புன்னகையை தேடி தனி குழு அமைத்து ஒவ்வொரு உட்கோட்டத்திற்க்கும் காவல் துறையின் சார்பு ஆய்வாளர்களின் தலைமையில் மாவட்ட அரசு சமீக அலுவலர்,தொழிலாளர் அலுவலர் , குழந்தைகள் குழு உதவி மைய அலுவலர் ஆகிய அலுவலர்களை இணைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள்,இரயில் நிலையங்கள், தொழிற்சாலை கள்ள மற்றும் பொது கோவில் கள்ள பகுதியில் புன்னகையை தேடி என்ற தணிக்கையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போன 9 குழந்தைகளை கண்டு பிடித்து அவர்களது பெற்றோர்களிடம் தக்க அறிவுரை வழங்கி ஒப்படைத்துள்ளனர்.
குழந்தை தொழிலாளர் வேலை செய்து கொண்டிருந்த 35 குழந்தைகளை கண்டு பிடித்து அவர்களது பெற்றோர்களிடம் தக்க அறிவுரை வழங்கி ஒப்படைத்தனர்.ஆதரவற்று பிச்சை எடுத்து கொண்டிருந்த 16 குழந்தைகளை கண்டு அதில் 10 குழந்தைகள காப்பகத்தில் ஒப்படைத்து மீதம் உள்ள 6 குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் தக்க அறிவுரை வழங்கி ஒப்படைத்தார்கள்.