கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. பகலவன், IPS ., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் (18.12.2022) தேதி காலை கீழ்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் திரு. மியாடிட் மனோ மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கூகையூர் ஆற்றுபாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது TN 46 X 8265 பதிவெண்கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தலா 30 லிட்டர் பிடிக்கக்கூடிய 5 லாரி டியூப்களில் சுமார் 150 லிட்டர் சாராயத்தை ஆத்தூர் முட்டள் இருந்து பெரம்பலூர் மாவட்டம் பனையந்தூருக்கு கடத்திச் சென்ற மாரிமுத்து(27) த/பெ செல்லதுரை, செல்லியம்மன் கோவில் தெரு, காரியானூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டடத்தை சேர்த்தவரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.