சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் லாட்டரி சீட் விற்பனை செய்வதாக ஓமலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.கந்தசாமி, மற்றும் தலைமை காவலர் திரு.அய்யப்பன், மற்றும் முதல்நிலை காவலர் திரு.கலையரசன், காவலர் திரு. பாரதியார், ஆகியவர்கள் அப்பகுதியில் சோதனை செய்தபோது அங்கு மணிகண்டன் (31), த/பெ அழகேசன் ஓமலூர் பனங்காடு கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் லாட்டாரி சீட் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து புகார் பதிவு செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்