திருவள்ளூர் : நாட்டில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நாட்டின் கண்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் இன்று காட்டுமிராண்டிகளால் மிதிக்கப்படுகிறார்கள்.. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் தலைமையில் குழந்தைத் திருமணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். தற்போது பெண்ணின் திருமண வயது 21 எனவும், ஆணின் திருமண வயது 23 எனவும் மாற்றப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளுவின் காரணமாக குழந்தைகளின் நடத்தைகளை கவனத்தில் கொள்வதில்லை. தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
இதனால் குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. குழந்தைகள் தொலைந்துபோவது வரை அவர்கள் என்ன செய்கிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? என்பது தெரிவதில்லை. குழந்தைகளிடம் அறிமுகமில்லாத நபர்கள் மட்டுமல்லாமல், குடும்பத்துக்குள் இருக்கும் நெருங்கிய உறவினர்களே இழிவாக நடந்துகொள்கின்றனர். இதை குழந்தைகள் வெளியே சொல்லத் தயங்குகின்றனர் அல்லது அஞ்சுகின்றனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் சிறுவயதிலிருந்தே பல விஷயங்களை வெளிப்படையாக புரியும் விதத்தில் சொல்லி வளர்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் தங்களிடம் வந்து சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நட்பாக பழக வேண்டும். யாரிடம் பழகுவது, யாரிடம் பழகக் கூடாது, ஆண்களின் தொடுகை குறித்த “குட் டச்’, ‘பேடு டச்’ (Good touch, Bad touch)” போன்றவற்றை கற்றுத்தர வேண்டும்..
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்