இராமநாதபுரம் : உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மேலும் பல நடவடிக்கைகளை நமது காவல் துறையினரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக ராமேஸ்வரம் காவல்துறையினருக்கு சேனிடைசர் வழங்கப்பட்டது. அதனை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, நமது குடியுரிமை நிருபர் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட இணை பொது செயலாளர் திரு.P.நம்பு குமார் வழங்கினார்.