அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு நடைபெற்ற குற்ற வழக்குகளை கண்டறிய அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின்படி அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சங்கர் கணேஷ், அவர்களின் மேற்பார்வையில் அரியலூர் காவல் ஆய்வாளர் திரு.கோபிநாத், கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் திரு. சகாய அன்பரசு, மற்றும் திருமானூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜவேல், அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்து வந்த நிலையில் (07.10.2022 ), குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 28 லட்சம் மதிப்புள்ள தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.