கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளக்குறிச்சி மற்றும் வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ்., அவர்கள் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள CCTV காட்சிகளை வைத்து விசாரணை செய்துவந்தனர். இந்நிலையில் 11.02.2023-ந் தேதி சேலம் to சென்னை தேசிய நெடுஞ்சாலை ஏமப்பேறு பிரிவு சாலை அருகே வாகன சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த கோகுல்(22), த/பெ ரமேஷ், ஏமப்பேர், கள்ளக்குறிச்சி என்பவரை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குபின் முரனாக பதில் அளித்த அவர் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்று உறுதியான நிலையில் அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது கள்ளக்குறிச்சி மற்றும் வரஞ்சரம் பகுதிகளில் TN 15 K 0664, TN 30 DS 4758, TN 15 W 1137 பதிவெண்கொண்ட இருசக்கர வாகனம் திருடியதை ஒப்புக்கொண்டார், அவரிடமிருந்து 3 இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யபட்டு. விசாரணை முடித்து குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.