சேலம் : சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில், ஈடுபட்ட குற்றவாளிகள் சதீஷ் (22), பராசக்தி நகர் சீலநாயக்கன்பட்டி தீபக்குமார் (20), கல்லுரான்காடு, ஆணைபள்ளம் பக்கநாடு கிராமம் காவல் ஆய்வாளர் திரு.எடப்பாடி, அவர்களால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் இருந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ம. ஸ்ரீ. அபிநவ் இ.கா.ப, அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், (5.9.2022), ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் திரு.கார்மேகம், அவர்கள் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் மேற்படி குற்றவாளிகள் மீது சேலம் மாநகரம் வீராணம், மற்றும் அம்மாபேட்டை, காவல் நிலையங்களிலும் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன என தெரிவித்துள்ளது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்